வெள்ளி, ஆகஸ்ட் 11, 2023

கவியும் இயற்கையும் - கவிதை

 


வெண்மேகம் திரட்டி 

செந்தேனில் தோய்த்து 

இளமஞ்சள் கதிரால் வாட்டி 

இயற்கை இட்ட தேனப்பமோ?

வானமகள் உடுத்திக் களைந்த  

வண்ணச் சேலையோ?

நீல வயல்களில் 

தங்கக் கிரணங்களை இறக்கி 

இளைப்பாறிய பின் அணியும் 

வெய்யோனின் மோன வித்தையா?

அறியேன் யான் 

என் பணி  

கால நதிக்கரையில் அமர்ந்து 

இயற்கை பேரெழில் மைத் தொட்டு 

கவிதை வரைவது மட்டுமே 

இயற்கை மட்டும் 

மற்றுமோர் கவிதையாய்  மாற 

புதிய வண்ணங்களைச்  

சிந்தித்துக் கொண்டிருக்கிறது