எப்போதேனும் பொழிந்து
என் மேனியைத் தழுவி
தன் காதலைச் சொல்கிறது மழை!
நானாகத் தேடும் போது
என் பாதங்களை முத்தமிட்டு
அலைக் கரத்தினால் இறுக அணைத்து
தன் காதலைப் பேசுகிறது கடல்!
விண்மீன் கூட்டத்தினிடையே
இரவில் மட்டும்
என் நினைவில் ஒளிர்ந்து
பகலில் என்னை மறந்து போகிறது நிலா!
என்னை நித்தமும் பின்தொடர்ந்து
என்னையே உருக்கி
நிலத்தில் நிழலாய் ஓடவிடும்
வெயிலாகவே வேண்டும் ஒரு காதல்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக