பின்பனிக்காலத்தில்
எல்லா மரமும்
இலைகளை உதிர்த்த பின்னும்
ஏதோ ஒரு மரம்
உலர்ந்த இலைகளைப்
பற்றிக் கொண்டு நிற்பது
யதேச்சையானதல்ல
காற்று பின்பு
எதை மணியாய்
சுற்றிச் சுழன்று இசைக்கும்
சூரியன் தன்
நிழலை எப்படி
சரி பார்த்துக்கொள்ளும்
பூமி தன்னுடைய
சுழற்சியின் வேகத்தை
எப்படிக் கணக்கிடும்
காலம்
ஒவ்வொன்றையும் எப்படிக்
மாற்றிப் போகிறது
என்பதை நாம் அறிவது எவ்வாறு
உதிர்ந்த நம் காதலின்
உலர்ந்த நினைவுகளே
நெடிய கானல் வாழ்வுக்கு
உயிரூட்டிக் கொண்டிருக்கிறது
என்றுணர்வது எங்கனம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக