வானிடம்
எல்லைக்குள் வாழும் முறைமை கேட்டேன்
நெருப்பிடம்
வாழ்விக்கும் வழிமுறைக் கேட்டேன்
நீரிடம்
ஓய்வின் உன்னதம் கேட்டேன்
யாரிடம்
எதைக் கேட்பதெனத்
தெரியாதா என்றது கவிதை
இருளின் சிறப்பை
ஒளியே அதிகம் அறியுமென்றேன்
இப்போது கவிதை
சிந்திக்கத் தொடங்கிவிட்டது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக