வியாழன், நவம்பர் 23, 2023

அருவி ஒரு பக்கக் கதைப் போட்டி




அருவி இலையுதிர் இதழ் சென்ற மாதம் வெளியானது. இது வரை ஓராண்டு கடந்து அருவியுடன் பயணித்து வருகிறேன். ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு சவால்கள்.குறிப்பாக, கொரோனா நோய் தொற்று காலத்தில் அருவி இதழ் வெளிவராத சூழல். ஆனால் நோய் தோற்று முடிந்து இயல்பு நிலை திரும்பிய பின் வந்த எங்கள் குழு அத்தனை காலம் முடங்கிக்  கிடந்த பேரவையின் அருவி இதழை மீண்டும் கொணர்ந்து பேரவையின் செய்திகளை தமிழ்ச் சங்கங்கள் பற்றிய செய்திகளை, இலக்கிய கட்டுரைகளை, அமெரிக்கா மற்றும் கனடாவில் வாழும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் விருந்தாக தொடர்ந்து கொடுத்து வருகிறோம்.






இந்த பயணத்தின் ஒரு மைல்கல்லாக அருவி குறுங்கதைப் போட்டி ஒன்றினை அறிவித்து நடத்தி வருகிறது. இந்த போட்டியின் விதிகளை மேலே இணைத்துள்ள சுற்றோலையில் காணலாம். சுற்றோலையில் உள்ள QR கோட் வழியே கதையினை பதியலாம். சிறப்பான பணப் பரிசுகளும் காத்து இருக்கின்றன. போட்டி வட அமெரிக்காவில் உள்ள எழுத்தாளர்களுக்கு மட்டும். (யுஎஸ்ஏ, கனடா) .போட்டியில்  கலந்து கொண்டு வெற்றி பெற அனைவரையும் அழைக்கின்றேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக