பாட்டுக்கு மெட்டமைப்பது என்பது AI தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பின் சாத்தியமே. வரிகளைக் கூட AI தொழில்நுட்பத்தின் வழி எழுதி விடலாம் என்றாலும் எழுதிய வரிகள் மனதிற்கு நெருக்கமாக இருப்பதில்லை. நெருக்கமான வரிகள் மனதின் உணர்வுகளில் இருந்து பிறக்கின்றன. எனவே வரிகளில் உணர்ச்சியும், மொழி லாவகமும், அடுத்தவரை சிந்திக்க வைக்கும் கருத்தும் கொண்ட பாடலை மனிதன் ஒருவனால் மட்டுமே வெற்றிகரமாய்ப் படைக்க முடியும் என்ற அளவில் கருவியின் முன் மனித அனுபவம் இன்னமும் விஞ்சியே நிற்கிறது. சென்ற வருடம் நான் இசை கோர்த்த அனுபவத்தை விட இந்த வருடம் நான் இசை கோர்த்த இந்தப் பாடல் மிகவும் அருமையாக அமைந்து விட்டது. இந்த ஒரு வருடத்தில் தொழில்நுட்பத்தின் பெரும் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. பாடலை இப்போது என்னுடைய வலையொளியில் கேட்கலாம்.
பாடல் வரிகளை இயற்கைக்கும், இயற்கையைப் போல கொடுக்கும் இயல்புள்ள பெண்ணுக்கும் பொருந்தும் வகையில் அமைத்திருக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக