புதன், ஆகஸ்ட் 04, 2021

கொரோனா நிதி மற்றும் புலவர் க. அன்பரசு நினைவுப் பரிசுப் போட்டி




வல்லின சிறகுகள் மின்னிதழ், அட்லாண்டா சார்பாக தமிழகத்தில் குறிப்பாக கடலூர், புதுச்சேரி பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு நிதி திரட்டப்பட்டது. உலகெங்கும் வாழும் பெண் கவிஞர்கள் தங்களால் முடிந்த நிதியை கொடையாக அளித்து உதவினார்கள். இந்தப் பெரும் பணியில் எனக்கும் ஒரு சிறு பங்கு இருந்தது மனதிற்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தது. நிதியளித்த பலர், அந்த நிதியை மக்களுக்கு கொண்டு சேர்த்த பலர் என்று இந்த பெரும் பணியில் பலரும் இணைந்து செயலாற்றினார். இந்த நிகழ்வினை பற்றி இந்த மாத வல்லினச் சிறகுகள் இதழில் வந்த கட்டுரையை கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம். 

வல்லின சிறகுகள் ஜூலை இதழில் பக்கம் 50 -இல் இந்த நிகழ்வினை பற்றிய செய்தியைக் காணலாம்.

இந்த நிகழ்வினை பற்றிய செய்தி தினமலர் மற்றும் ஏ-1 தமிழ் நியூஸ் போன்ற வலைத்தளங்களில் வந்த செய்தியை கீழே காணலாம். 




புதுச்சேரி வள்ளலார் சபை மற்றும் கடலூர் அரசு மருத்துவமனை ஆகிய இரண்டும் பயன்படும் வண்ணம் நிதியளித்த அனைத்து தமிழ் உறவுகளுக்கும் நனி நன்றி.

இது மட்டும் அல்லாமல் புலவர் க.அன்பரசு நினைவுப் பரிசுப் போட்டிக்கான விவரங்களை கீழே காணலாம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக