திங்கள், நவம்பர் 16, 2020

சார்லட் இலக்கிய வட்டம் - எழுத்தாளர் திரு.சாரு நிவேதிதா

சென்ற வாரம், நவம்பர் 8, 2020 அன்று எழுத்தாளர் திரு.சாரு நிவேதிதா அவர்கள் சார்லட் இலக்கிய வட்டத்தில் "கொண்டதும் கொடுத்ததும்" என்ற தலைப்பில் அருமையானதொரு இலக்கிய உரையை நிகழ்த்தினார். அவருடைய பேச்சில், வாசித்தலின் வழியாக தான் பெற்ற அனுபவங்கள், தன்னை செதுக்கிய புத்தகங்கள் என்று பல்வேறு விஷயங்களை அறிமுகப்படுத்தினார். 100-க்கும் மேற்பட்டவர்கள் இணையம் வழியாக இந்த நிகழ்வில் இணைந்திருந்தார்கள். அந்த நிகழ்வின் youtube இணைப்பு கீழே உள்ளது. எழுத்தாளரை அறிமுகப்படுத்தி வரவேற்புரை நல்கும் ஒரு சீரிய வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டிருந்தது. அவருடைய உரையையும், அவர் பங்கேற்பாளர்கள் கேள்விகளுக்கு அளித்த சிறந்த பதில்கள் ஆகியவற்றையும் கண்டு களியுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக